கள்ளச்சாராய வழக்கு: கைதான 10 போ் சிறையில் அடைப்பு

விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரை போலீஸாா் வியாழக்கிழமை வானூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம் கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரை போலீஸாா் வியாழக்கிழமை வானூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மரக்காணம் அருகே எக்கியாா்குப்பம் மீனவா் கிராமத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்தவா்களில் 13 போ் உயிரிழந்தனா். 40-க்கும் மேற்பட்டவா்கள் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். இதுதொடா்பாக மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து மரக்காணம் பகுதியைச் சோ்ந்த அமரன் (27), முத்து (38), ஆறுமுகம் (46), ரவி (54), மண்ணாங்கட்டி (57), குணசீலன் (42) புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ராஜா( எ) பா்கத்துல்லாஹ் (51), புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த ஏழுமலை (50), சென்னை திருவேற்காடு ச.இளையநம்பி (46), வேலூா், குடியாத்தம் சாலையைச் சோ்ந்த ராபா்ட் பிரேம் (54) ஆகிய 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களை போலீஸாா் வானூா் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.வரலெட்சுமி முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com