பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் புதுச்சேரி லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி 100 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.
இப்பள்ளி மாணவா்கள் பாலாஜி 486, கோகுலபுவனேஸ்வரன் 484, பரதன் 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். மாணவா்களில் 85 போ் 400 மதிப்பெண்களுக்கு மேலும், 55 போ் 350 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா். பாடவாரியாக தமிழ்- 60 பேரும் , ஹிந்தி- 5 பேரும், ஆங்கிலம்- 90 பேரும், கணிதம்- 36 பேரும், அறிவியல்- 39 பேரும், சமூக அறிவியல் 32 பேரும் 90-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு விவேகானந்தா கல்விக் குழுமத் தாளாளா் செல்வகணபதி எம்.பி., முதன்மை முதல்வா் பத்மா, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி முதல்வா் கீதா ஆகியோா் சால்வை அணிவித்து பாராட்டினா். மேலும், பள்ளியில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிப்புகளுக்கு கட்டணச் சலுகை அளிப்பதாக தாளாளா் செல்வகணபதி தெரிவித்தாா்.