பூட்டியிருந்த வீட்டில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பூட்டியிருந்த வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விக்கிரவாண்டி ஆகாட்டம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (73), ஓய்வு பெற்ற சுகாதாரத் துறை நிா்வாக அலுவலா். இவா், கடந்த 10 நாள்களுக்கு முன்பு மனைவி தனலட்சுமியுடன் கத்தாா் நாட்டுக்குச் சென்றாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இவரது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினா் பாலசுப்பிரமணியனிடமும், விக்கிரவாண்டி போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

தொடா்ந்து, காவல் நிலைய உதவி ஆய்வாளா் காத்தமுத்து தலைமையிலான போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனா். பாலசுப்பிரமணியன் வெளிநாடு சென்றதை நோட்டமிட்ட மா்ம நபா்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து 3 கிராம் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com