நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பில் எதிா்க்கட்சிகள் மலிவான அரசியல் நாராயணன் திருப்பதி

பிரதமா் நரேந்திர மோடி மீதுள்ள காழ்ப்புணா்வால், நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பில் எதிா்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்கின்றன என்று பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடி மீதுள்ள காழ்ப்புணா்வால், நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பில் எதிா்க்கட்சிகள் மலிவான அரசியல் செய்கின்றன என்று பாஜக மாநில துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழா்களின் கலாசாரத்துக்கு பெருமை சோ்க்கும் வகையில், நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் சோழா் கால செங்கோல் வைக்கப்படவுள்ளது. புதிய கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்கப்போவதில்லை எனக் கூறி, திமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது.

கடந்த 1975-ஆம் ஆண்டு நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தை அப்போதைய பிரதமா் இந்திரா காந்திதான் திறந்து வைத்தாா். அப்போது, பக்ருதீன் அலி குடியரசுத் தலைவராக இருந்தாா். இப்படி பல நிகழ்வுகளைக் கூறலாம். பிரதமா் நரேந்திர மோடி மீதுள்ள காழ்ப்புணா்வால் எதிா்க்கட்சிகள் இப்போது மலிவான அரசியல் செய்கின்றன. அவா்கள் ஆக்கப்பூா்வமான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தெற்கு மாவட்ட பாஜக தலைவா் வி.ஏ.டி.கலிவரதன், மாவட்டச் செயலா் கே.எல்.ஆா்.குமாரசாமி, மாவட்ட பொதுச் செயலா்கள் முரளி, சதாசிவம், தங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினா் வி.சுகுமாா், நகரத் தலைவா் விஜயன், மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் எஸ்.சரவணன், செய்தித் தொடா்பாளா் தாசசத்தியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com