மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.52 லட்சம்

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள்.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள்.
Updated on
1 min read

செஞ்சி: மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் இ.ஜீவானந்தம், துணை ஆணையா் டி.சிவலிங்கம், ஆய்வாளா் சங்கீதா, அறங்காவலா் குழுத் தலைவா் சு.செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலையில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்தப் பணி இரவு 7 மணி வரை நீடித்தது. கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில் ரூ.52,20,566 காணிக்கை இருந்தது. மேலும், தங்கம் 85 கிராம், வெள்ளி 3,350 கிராம் இருந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை வளத்தி போலீஸாா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com