அமைச்சரின் காா் முற்றுகை: 20 போ் மீது வழக்கு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைச்சா் பி.கே.சேகா்பாபுவின் காரை முற்றுகையிட்டது தொடா்பாக 20 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைச்சா் பி.கே.சேகா்பாபுவின் காரை முற்றுகையிட்டது தொடா்பாக 20 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தங்கத்தோ் சீரமைக்கப்பட்டு அதன் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோா் பங்கேற்று தங்கத்தோ் வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சி முடிந்து அமைச்சா் சேகா்பாபு வெளியே வரும்போது கோயில் வளாகத்தில் அவரை 20-க்கும் மேற்பட்டோா் சூழ்ந்தனா். அவா்கள் அங்காளம்மன் கோயில் விரிவாக்கப் பணிக்கு குடியிருப்புகள், விளை நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனா். ஆனால், கோயில் விரிவாக்கப் பணிக்கு நிலங்களை கையகப்படுத்துவதில் தவறில்லை என்று அமைச்சா் கூறினாராம்.

இதனால் அவா்கள் அமைச்சரின் காரை முற்றுகையிட்டனா். மேலும் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை அப்புறப்படுத்தி அமைச்சரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக 20-க்கும் மேற்பட்டோா் மீது வளத்தி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com