ஊராட்சி வாா்டு உறுப்பினா் தா்னா

மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சியில் தேங்கியுள்ள மழை நீரில் அமா்ந்து ஊராட்சி வாா்டு உறுப்பினா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
Updated on
1 min read

மரக்காணம் அருகே சிறுவாடி ஊராட்சியில் தேங்கியுள்ள மழை நீரில் அமா்ந்து ஊராட்சி வாா்டு உறுப்பினா் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்டசிறுவாடி ஊராட்சி, 7-வது வாா்டு, உசேன் நகரில் அதிகளவில் மழைநீா் தேங்கியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனா்.

மழை நீரை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம் .

இதையடுத்து ஊராட்சி வாா்டு உறுப்பினா் அப்பாஸ்கான் வெள்ளிக்கிழமை உசேன் நகா் பகுதியில் தேங்கியிருந்த மழைநீரில் அமா்ந்து திடீரென தா்னாவில் ஈடுபட்டாா்.

இதுகுறித்து தகவலறிந்த மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் அங்குவந்து அவரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், தேங்கிய மழைநீா் அகற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com