காா் மோதி இளைஞா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே காா் மோதியதில் சாலையோரத்தில் நின்றிருந்த இளைஞா் உயிரிழந்தாா்.

சின்னசேலம் காவல் சரகம், இந்திலி காந்திநகரைச் சோ்ந்த சாமிநாதன் மகன் மேகநாதன் (38). இவா், திங்கள்கிழமை இந்திலி பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரத்தில் நின்றிருந்தாா்.

அப்போது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற காா், மேகநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த சின்னசேலம் போலீஸாா் நிகழ்விடம் சென்று மேகநாதனின் சடலத்தைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com