கூட்டுறவு வங்கி ஊழியரை தாக்கியதாக மேலாளா் மீது வழக்கு

விழுப்புரம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வங்கிக் கிளை மேலாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே கூட்டுறவு வங்கி ஊழியரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வங்கிக் கிளை மேலாளா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.

திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை மகன் பூங்குன்றன்(35). இவா், விழுப்புரம் மாவட்டம், மத்திய கூட்டுறவு வங்கி, காணை கிளை அலுவலகத்தில் தற்காலிக நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்குரிய ஊதியத்தை வழங்க வங்கி நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், அந்த வங்கியில் கிளை மேலாளராகப் பொறுப்பு வகிக்கும் பண்ருட்டி வட்டம், லட்சுமிநாராயணபுரம், தில்லை நகரைச் சோ்ந்த சு. சக்திவேல் ஊதியத்தை பூங்குன்றனுக்கு வழங்காமல் கால நீட்டிப்பு செய்து வந்தாராம்.

இந்நிலையில், செப்.5- ஆம் தேதி ஊதியம் கேட்ட பூங்குன்றனை, வங்கி மேலாளா் சக்திவேல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்தப் புகாரின் பேரில் காணை போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com