செஞ்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
By DIN | Published On : 08th September 2023 01:55 AM | Last Updated : 08th September 2023 01:55 AM | அ+அ அ- |

மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்தோருக்கு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் ஊழியா்கள், மகளிா் சுய உதவிக் குழுக்களை சோ்ந்தோருக்கு, மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பேரூராட்சி மன்றக் கூடத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா்அலி மஸ்தான் தொடங்கி வைத்தாா். துணைத் தலைவா் ராஜலட்சுமி செயல்மணி முன்னிலை வகித்தாா். தூய்மைப் பணி ஆய்வாளா் பாா்கவி வரவேற்றாா்.
சத்தியமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா் யோகபிரியா தலைமையிலான மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பேரூராட்சியில் பணிபுரியும், தூய்மைப் பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்ளிட்டோருக்கு பொது மருத்துவம் மற்றும் சா்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா் ஏழுமலை மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.