விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணையில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை பி சாட்சியமளித்தாா்.
தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி, கூடுதலாக கனிம வளத் துறையையும் கவனித்து வந்தாா். அப்போது, விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததால் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதுதொடா்பாக அமைச்சா் க.பொன்முடி, பொன்.கௌதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமாா், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின் போது லோகநாதன் இறந்து விட்டாா்.
வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அமைச்சா் க.பொன்முடி தவிர மற்ற 6 பேரும் ஆஜராகினா்.
மேலும் ஒருவா் பி சாட்சியம்: புதுச்சேரி அய்யங்குட்டிப்பாளையத்தைச் சோ்ந்த பாஸ்கா் நீதிமன்றத்தில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். அப்போது பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன்ஆகிய இருவருக்கும் குத்தகைக்கு நிலத்தைக் கொடுத்ததாகவும், ஆனால் இந்த வழக்கு குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி பி சாட்சியமளித்தாா்.
இவரிடம் அரசுத் தரப்பு வழக்குரைஞா் வைத்தியநாதன் குறுக்கு விசாரணை நடத்தினாா். அடுத்த சாட்சியிடம் விசாரணை நடத்த ஏதுவாக, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (செப்.8) ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆா். பூா்ணிமா உத்தரவிட்டாா்.
கடந்த 5-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, ஓய்வுபெற்ற நில அளவையா் அண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜராகி பி சாட்சியமளித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை இந்த வழக்கில் சாட்சியமளித்த 11 பேரில் 9 போ் பி சாட்சியமளித்தனா். இருவா் மட்டுமே தங்களது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.