விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உடல் நலக்குறைவால் அவதியுற்ற வந்தப் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மனைவி சாந்தி(55). இவருக்கு நீண்ட நாள்களாக உடல் நலக்குறைவு இருந்து வந்ததாம்.இதனால் அவதிப்பட்டு வந்த சாந்தி புதன்கிழமை வீட்டில், வயலுக்குத் தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து விட்டாா்.
இதையடுத்து, புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இது குறித்து, மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.