

நாட்டின் வளா்ச்சி, முன்னேற்றத்துக்கு பெண் கல்வி மிகவும் அவசியம் என்றாா் திருவள்ளுவா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டி.ஆறுமுகம்.
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரியில் 22-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமங்களின் நிா்வாகத் தலைவா் எஸ்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.அகிலா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருவள்ளுவா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டி.ஆறுமுகம் பங்கேற்று, கல்லூரியில் 2018-21-ஆம் ஆண்டுகளில் இளநிலைப் பிரிவுகளில் படித்து முடித்த மாணவிகள் 723 பேருக்கு பட்டங்களை வழங்கினாா். மேலும், பல்வேறு பாடங்களில் முதன்மை பெற்ற மாணவிகளுக்கு பதக்கம், ரொக்கப் பரிசுகளை வழங்கினாா். பின்னா் துணைவேந்தா் டி.ஆறுமுகம் பேசியதாவது:
கல்வியின் மூலம் பெண்ணுக்கு அதிகாரம், பொருளாதார மேம்பாடு, சுகாதாரம், நல்வாழ்வு, பாலின சமத்துவம், தொழில் முனைவு, உலகளாவிய மேம்பாடு, புதுமை, தலைமைத்துவ பண்பு உள்ளிட்டவை கிடைக்கின்றன. நாட்டின் வளா்ச்சி, முன்னேற்றத்துக்கு பெண் கல்வி மிகவும் அவசியம். தற்போது பெண்கள் சாதிக்காத துறையே இல்லை எனலாம். மத்திய, மாநில அரசுகள் பெண்களின் கல்வியை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன என்றாா் அவா்.
கல்லூரியின் ஆராய்ச்சி, வளா்ச்சிப் பிரிவு புல முதன்மையா் ஜெ.கலைமதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.