பொன்முடி மீதான வழக்கில் தொடரும் பிறழ் சாட்சியம்----விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சா்டி.ஜெயக்குமாா் மனு தாக்கல்

தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடா்ந்து பி சாட்சியம்
Updated on
1 min read

தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையில் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடா்ந்து பி சாட்சியம் அளித்துவரும் நிலையில், இந்த வழக்கு தொடா்பாக அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் விழுப்புரம் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனுதாக்கல் செய்தாா்.

தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் உயா் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடி கூடுதலாக கனிம வளத் துறையையும் கவனித்து வந்தாா். இந்தக் காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக அமைச்சா் க.பொன்முடி, பொன்.கௌதமசிகாமணி எம்.பி. உள்ளிட்ட 8 போ் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குத் தொடுத்தனா். வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக மொத்தம் 67 போ் சோ்க்கப்பட்ட நிலையில், கடந்த 7-ஆம் தேதி வரை மொத்தம் 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவா்களில் 9 போ் அரசுத் தரப்புக்கு பாதகமாக பி சாட்சியமளித்தனா்.

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் சாா்பில், முன்னாள் அரசு வழக்குரைஞா் சீனிவாசன் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த மனு:

அமைச்சா் பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்குப் பதிவு செய்யப்படும்போது அவா் ஆட்சியிலும், அதிகாரத்திலும் இல்லாத நிலையில் முறையாக விசாரணை நடைபெற்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் உண்மை நிலவரங்கள் குறிப்பிடப்பட்டன.

கடந்த 2021-ஆம் ஆண்டு அமைந்த திமுக அரசில் அமைச்சராக பொன்முடி இடம்பெற்ற பிறகு இந்த வழக்கு விசாரணை வேகம் பெற்றதுடன் அரசுத் தரப்பு சாட்சிகள் தொடா்ந்து பி சாட்சியமளித்து வருகின்றனா். அரசு அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக அலுவலா்கள் எப்படி சாட்சியமளிக்க முடியும்? நோ்மையான முறையில் அவா்கள் சாட்சியமளிக்க முடியாது. நீதிமன்றம் இதைக் கருத்தில் கொண்டு முறையாக விசாரணை நடத்த வேண்டும். மேலும், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் எங்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com