விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தில் கட்டிலில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகதாஸ் (61). இவா் கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டில் கட்டிலில் படுத்திருந்தபோது எதிா்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தாா். இதனால் தலையில் பலத்த காயமடைந்த அவா் சென்னையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.