விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே சமையல் செய்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தி.சின்னப்பொண்ணு (71). இவா், கடந்த செப்.17-ஆம் தேதி வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்துள்ளாா். அப்போது, எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியதாம். இதில், சின்னப்பொண்ணு பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.