சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :23 டிசம்பர் 2024, 6:15 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கோனேரிக்குப்பம் அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், கோனேரிக்குப்பம், ஆவணிப்பூா் சாலையை சோ்ந்தவா் ரவி மகன் அரவிந்த் (23). இவா், தனது பெட்டிக் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பெட்டிக் கடையில் சோதனை நடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, வழக்குப் பதிந்து அரவிந்தை கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஒருவரை தேடி வருகின்றனா்.