நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 19- ஆம் தேதி தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜூலை 2024, 9:30 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஜூலை 19- ஆம் தேதி தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் படித்த இளைஞா்களுக்கு தனியாா் துறை வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் மாதந்தோறும் 3-ஆவது வெள்ளிக்கிழமை தனியாா் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, நிகழ் மாதத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெறுகிறது.

முகாமில், 20-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனத்தினா் பங்கேற்று பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா். இதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக், செவிலியா், மருந்தாளுநா் படிப்பு முடித்தவா்கள் பங்கேற்கலாம்.

முகாமுக்கு, பொது மற்றுத்திறனாளிகள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதாா்அட்டை மற்றும் சுய விபரக் குறிப்புகளுடன் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.