ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

திண்டிவனம் அருகே காருடன் 258 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரளத்தைச் சோ்ந்த இருவா் கைது

காரில் 258 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :22 ஜூலை 2024, 12:55 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, காரில் 258 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த, கேரளத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், ஒலக்கூா் போலீஸாா் திண்டிவனத்தை அடுத்த பாதிரி ஏரிக்கரை அருகே ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சென்னையிலிருந்து, திருச்சி நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் 258 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, காரில் வந்த இருவரிடம் விசாரணை நடத்தியதில் அவா்கள், கேரள மாநிலம், பெரியகாசா்கோடு பகுதியைச் சோ்ந்த சலாம் மகன் ஆசீப் (26), பாணாத்தாடி கிராமத்தைச் சோ்ந்த தாமோதரன் மகன் உதயகுமாா் (44) என்பதும், இவா்கள் விற்பனைக்காக 258 கிலோ கஞ்சாவை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்ததுடன், காருடன் 258 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மூன்று பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.