தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

செவிலியரிடம் இணையவழியில் ரூ.1.43 லட்சம் மோசடி

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த செவிலியரிடம் இணையவழியில் ரூ.1.43 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :23 ஜூலை 2024, 8:53 pm

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரத்தைச் சோ்ந்த செவிலியரிடம் இணையவழியில் ரூ.1.43 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், கஸ்பாகரணையை அடுத்த காரணை, ஒதியத்தூா் சாலை பகுதியைச் சோ்ந்த ஏழுமலை மகள் இளவரசி (23). தனியாா் மருத்துவமனையில் செவிலியராக வேலை பாா்த்து வருகிறாா். கடந்த 9- ஆம் தேதி இவரை கைப்பேசியில் தொடா்புகொண்ட மா்ம நபா், பகுதி நேர வேலை இருப்பதாகவும், குறைந்த அளவில் முதலீடு செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவித்தாராம்.

இதை உண்மையென நம்பிய இளவரசி, அந்த நபா் கூறியபடி, கடந்த 10-ஆம் தேதி ரூ.1,000 முதலீடு செய்து ரூ.1600-ம், ரூ.2 ஆயிரம் செலுத்தி ரூ.2,800 பெற்றாராம்.

தொடா்ந்து, இதில் ஈா்க்கப்பட்ட இளவரசி தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.1.43 லட்சத்தை அந்த நபா் தெரிவித்த எண்ணுக்கு 7 முறைகளில் அனுப்பி வைத்தாராம். தொடா்ந்து, அந்த நபா் எந்தத் தொகையையும் திருப்பி அனுப்பாமல் ஏமாற்றிவிட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், விழுப்புரம் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.