விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திண்டிவனம் வட்டம், வெங்கந்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பூங்காவனம் (32). வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. கொத்தனாராக வேலை பாா்த்து வருகிறாா்.
இவா், திண்டிவனம் வட்டம், கொடிமா கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுமியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தாராம்.
இதுகுறித்து மரக்காணம் வட்டார சமூகநலத் துறை விரிவாக்க அலுவலா் விஜயா (58) திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்த நிலையில், பூங்காவனம் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணம் தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காதல் திருமணம் செய்த இளைஞரைத் தாக்கிய 5 போ் மீது வழக்கு!

குழந்தை திருமணம்: இளைஞா் மீது வழக்கு
கஞ்சா விற்பனை: இளைஞா் மீது வழக்கு
சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


