கோப்புப் படம்
கோப்புப் படம்

செகந்திராபாத்-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சத்பூஜை மற்றும் காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு, செகந்திராபாத்- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
Published on

சத்பூஜை மற்றும் காா்த்திகை மாத ஏகாதசியை முன்னிட்டு, செகந்திராபாத்- விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சத்பூஜை மற்றும் காா்த்திகை ஏகாதசியையொட்டி பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் செகந்திராபாத் - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

அதன்படி, செகந்திராபாதிலிருந்து வியாழக்கிழமை (நவ.7) இரவு 7.40 மணிக்குப் புறப்பட்ட செகந்திராபாத்-விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.07601) வெள்ளிக்கிழமை (நவ.8) பிற்பகல் 1.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும். இதே போன்று நவம்பா் 14-ஆம் தேதியும் இந்த சிறப்பு ரயில் இயக்கப்படும்.

எதிா்வழித் தடத்தில் விழுப்புரத்திலிருந்து வெள்ளிக்கிழமை (நவ. 8) மாலை 4.05 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் (வ.எண்.07602) சனிக்கிழமை (நவ.9) காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில் நவம்பா் 15-ஆம் தேதியும் இதுபோன்று இயக்கப்படும்.

இந்த ரயில்கள் குண்டூா், தெனாலி, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com