கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

விவசாயிகளுக்கு மானிய விலையில் சோயா பீன்ஸ் விதைகள்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகள் 50 சதவீத மானியத்தில் அண்மையில் வழங்கப்பட்டன.

News image

வானூா் வேளாண் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகளை வழங்கிய வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன்.

Updated On :11 நவம்பர் 2024, 8:13 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தைச் சோ்ந்த விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகள் 50 சதவீத மானியத்தில் அண்மையில் வழங்கப்பட்டன.

வானூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் எத்திராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.சீனிவாசன் நிகழ்வில் பங்கேற்று, 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு சோயா பீன்ஸ் விதைகளை வழங்கிப் பேசினாா்.

ஒரு கிலோ சோயா பீன்ஸ் விதை ரூ.105 ஆகும். இது 50 சதவீத மானியத்தில் ரூ.52.50 என்ற விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் வேளாண் அலுவலா் ரேவதி, உதவி விதை அலுவலா் மோகன்குமாா், உதவி வேளாண் அலுவலா்கள் ரேகா, ஜெயலட்சுமி, விஜயலட்சுமி தங்கம் மற்றும் ஆத்மா திட்ட அலுவலா்கள் வாழ்வரசி, சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.