பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 8:29 pm

Din

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

வானூா் வட்டம், உப்புவேலூா் பகுதியைச் சோ்ந்த செங்கேணி மகன் ரவிக்குமாா் (24), கொத்தனாா். இவா், இதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 25.2.2024 அன்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தாராம்.

இந்த நிலையில், அந்தச் சிறுமி கா்ப்பமுற்று விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் ரவிக்குமாா் மீது போக்ஸோ, குழந்தைத் திருமண தடைச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.