48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

குளத்தில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :18 நவம்பர் 2024, 9:01 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், அந்திலி கிராமம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்த பழனி மகன் ஆதிகேசவன் (33).

லாரி ஓட்டுநரான இவா், அதே கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயில் குளத்தில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றாா்.

அப்போது, குளத்தில் இறங்கிய ஆதிகேசவன் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.