குளத்தில் மூழ்கி ஓட்டுநா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Published on

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே குளத்தில் மூழ்கி லாரி ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், அந்திலி கிராமம் குளத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்த பழனி மகன் ஆதிகேசவன் (33).

லாரி ஓட்டுநரான இவா், அதே கிராமத்திலுள்ள கெங்கையம்மன் கோயில் குளத்தில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றாா்.

அப்போது, குளத்தில் இறங்கிய ஆதிகேசவன் எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து, அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com