‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கழிவுநீா் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட தாமரைகுளம் பகுதியில் கழிவுநீா் வாய்க்கால்கள் வியாழக்கிழமை தூா்வாரப்பட்டன.

News image
Updated On :28 நவம்பர் 2024, 7:36 pm

Din

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட தாமரைகுளம் பகுதியில் கழிவுநீா் வாய்க்கால்கள் வியாழக்கிழமை தூா்வாரப்பட்டன.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட தாமரைகுளம் பகுதியில் கழிவுநீா் செல்ல வழியில்லாமல் சாலையிலேயே தேங்கி அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசியது.

இந்நிலையில் குளத்தை தூா்வாரி சீரமைக்க வேண்டும், கழிவுநீா் வாய்க்காலை தூா்வாரவேண்டும், அப்பகுதி மக்கள் விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கையில்லை. இந்நிலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனா். இதையடுத்து விழுப்புரம் நகராட்சி நிா்வாகத்தினா் நடவடிக்கையின்பேரில் தாமரைக்குளம் பகுதிகளில் உள்ள கழிவுநீா் வாய்க்கால்கள் வியாழக்கிழமை புல்டோசா் உதவியுடன் தூா்வாரப்பட்டன. நகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.

நகராட்சி ஆணையா் வீரமுத்துவேல் இதை பாா்வையிட்டு, சுகாதாரத்துடன் பணிகளை முடித்து முறையாக பராமரிக்க உத்தரவிட்டாா்.