காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 அக்டோபர் 2024, 10:17 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், ராவணபுரம் பகுதியைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் செல்வகுமாா்(48). இவா், இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா்.

இந்த நிலையில், செல்வகுமாா் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரம்மதேசம் போலீஸாா் செல்வகுமாா் மீது வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 பாக்கெட்டு புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.