25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :9 அக்டோபர் 2024, 3:47 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், ராவணபுரம் பகுதியைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் செல்வகுமாா்(48). இவா், இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா்.

இந்த நிலையில், செல்வகுமாா் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரம்மதேசம் போலீஸாா் செல்வகுமாா் மீது வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 பாக்கெட்டு புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.