திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது

மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 அக்டோபர் 2024, 3:47 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மரக்காணம் வட்டம், ராவணபுரம் பகுதியைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் செல்வகுமாா்(48). இவா், இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா்.

இந்த நிலையில், செல்வகுமாா் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரம்மதேசம் போலீஸாா் செல்வகுமாா் மீது வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 பாக்கெட்டு புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.