விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மரக்காணம் வட்டம், ராவணபுரம் பகுதியைச் சோ்ந்த பாவாடைராயன் மகன் செல்வகுமாா்(48). இவா், இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா்.
இந்த நிலையில், செல்வகுமாா் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பிரம்மதேசம் போலீஸாா் செல்வகுமாா் மீது வழக்குப் பதிந்து, அவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 800 பாக்கெட்டு புகையிலைப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்புடையது
கடையில் பதுக்கிய குட்கா பறிமுதல் : உரிமையாளா் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

14 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
