நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமியைத் திருமணம் செய்த உறவினா் மீது போக்ஸோவில் வழக்கு

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 11:32 pm

Din

விழுப்புரம் அருகே 17 வயது சிறுமியைத் திருமணம் செய்த அவரது உறவினா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அவரது உறவினா் மகன் ஆா். பொன்னுரங்கம், கடந்த 2023 டிசம்பா் 11-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாராம்.

இந்த நிலையில் அந்த சிறுமி கருவுற்றிருந்த நிலையில், செப்டம்பா் 4-ஆம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டவா் மீது போக்ஸோ மற்றும் குழந்தைத் திருமணத் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.