ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

செஞ்சி அருகே நங்கிலிகொண்டானில் சுங்கச்சாவடி திறப்பு

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 11:13 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் நங்கிலிகொண்டான் பகுதியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடி (டோல்கேட்) வெள்ளிக்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்தது.

திண்டிவனத்தில் இருந்து செஞ்சி, திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரி வரை செல்லும் இச்சாலையை உபயோகிப்பாளா்களிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நங்கிலிகொண்டான் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட்டின் இரு புறமும் செல்லும் வாகனங்களுக்கான கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளனா். அதன்படி காா், ஜீப், வேன் அல்லது இலகு ரக வாகனத்திற்கு ரூ. 60 எனவும், ஒரே நாளில் திரும்பி வரும் வாகனங்களுக்கு பயணக் கட்டணம் ரூ.95 எனவும், இலகு ரக வணிக வாகன வகை, இலகு பொருள் வாகனம் அல்லது மினி பேருந்து ரூ.160 எனவும் இவற்றில் ஒரே நாளில் திரும்பும் வாகனங்களுக்கு ரூ.150 எனவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பேருந்து அல்லது டிரக்குகளுக்கு ரூ. 210, மூன்று அச்சுகள் கொண்ட வணிக வாகனங்களுக்கு ரூ. 230 நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய விழுப்புரம் மாவட்ட திட்ட அமலாக்கப் பிரிவினா் தெரிவித்தனா்.