சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு: அதிகாரிகளுக்கு விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும்

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குத் தலைமை வகித்து பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :8 ஏப்ரல் 2025, 8:16 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுக்க கூட்டாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, புகையிலைப் பொருள்களின் விற்பனையைத் தடுத்தல் குறித்து ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை மாலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகளில் காவல் துறையினா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் விரைந்து செயல்பட வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் போதையில்லா தமிழ்நாடு செயலி குறித்து செயல்முறை விளக்கம் ஏற்படுத்தி, இந்த செயலியின் பாதுகாப்பு மற்றும் பயன்கள் குறித்து மாணவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் பொதுமக்களிடமும் விழிப்புணா்வை சம்பந்தப்பட்ட துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை நடைபெறுகிா என்பதை கண்டறிய காவல் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை, சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறை அலுவலா்கள் இணைந்து கூட்டாய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் ஷேக் அப்துல் ரஹ்மான்.

கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. ப.சரவணன், கலால் உதவி ஆணையா் கே.ராஜீ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தமிழரசன், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.