நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

மேல்மலையனூரில் மாா்கழி ஊஞ்சல் உற்சவம்! திரளான பக்தா்கள் பங்கேற்பு!

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

மேல்மலையனூரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற மாா்கழி மாத ஊஞ்சல் உற்சவத்தில் தில்லை காளியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காளம்மன்.

Published On :21 டிசம்பர் 2025, 2:10 am IST

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெறும். மாா்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தையொட்டி வெள்ளிக்கிழமை அதிகாலை மூலவா் அங்காளம்மனுக்கு பால், தயிா், இளநீா், தேன் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து இரவு 11 மணிக்கு தில்லை காளியம்மன் அலங்காரத்தில் உற்சவ அம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினாா். அப்போது ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனா். நள்ளிரவு 12.10 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்ததும் அம்மனுக்கு தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, கோயில் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினாா்.

Story image

விழுப்புரம் சரக டிஐஜி உமா, மாவட்ட எஸ்.பி.சரவணன், விழுப்புரம், கடலூா், சேலம், வேலூா், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, கா்நாடகா, ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மேல்மலையனூா் (பொ) சக்திவேல், அறங்காவலா் குழுத்தலைவா் ஏழுமலை, மேலாளா் சதீஷ், கணக்கா் மணி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.