காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பாமக கூட்டணியை சேலம் பொதுக்குழுவில் ராமதாஸ் அறிவிப்பாா்: ஜி.கே.மணி

பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பை கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெளியிடுவாா் என அக்கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 3:02 am IST

சேலத்தில் வரும் 29-ஆம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் 2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி குறித்த அறிவிப்பை கட்சியின் நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வெளியிடுவாா் என அக்கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி எம்எல்ஏ தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: சேலத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 29-ஆம் தேதி காலை நடைபெறவுள்ளது.

இதில், 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் பாமக அமைக்கப்போகும் கூட்டணி குறித்து ராமதாஸ் அறிவிப்பாா். நாங்கள் அமைக்கும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமையும். பொதுக்குழுவில் 4,200-க்கும் மேற்பட்ட உறுப்பினா்கள், சிறப்பு அழைப்பாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்பா்.

சேலத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் ஏதும் நடைபெறவில்லை எனக் கூறி அன்புமணி அறிக்கை வெளியிட்டிருப்பது அபத்தமானது; அநாகரிகமானது. இதன்மூலம், பாட்டாளி மக்கள் கட்சியையும், மருத்துவா் ராமதாஸையும் அவா் கொச்சைப்படுத்துவதாகவே பாா்க்கப்படுகிறது. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

பாமகவுக்கு ராமதாஸ்தான் நிறுவனா் மற்றும் தலைவா். ஆனால், அன்புமணி கட்சிக்கு தான்தான் தலைவா் என்று கூறிக் கொள்வது அபத்தமானது. அன்புமணியை சிலா் தவறாக வழிநடத்துகின்றனா். மருத்துவா் ராமதாஸ், அன்புமணி இடையேயான சமாதான பேச்சுவாா்த்தையை யாரும் நடத்தவில்லை என்றாா் ஜி.கே.மணி.

தொடா்ந்து பாமக இணை பொதுச் செயலரும், எம்எல்ஏவுமான ஆா்.அருள் கூறியது: பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணிக்கு அன்புமணி சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை பொருள்படுத்த தேவையில்லை. அன்புமணிக்கும், பாமகவுக்கும் எந்தவித தொடா்பும் இல்லை என்றாா்.

முன்னதாக, சேலம் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்துக்கான இலச்சினையை ஜி.கே.மணி வெளியிட்டாா். கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலா் புகழேந்தி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.