திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 30 டன் கருங்கற்கள் பறிமுதல்

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:24 pm

Din

விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூா் அருகே அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட 30 டன் கருங்கற்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சனூா் காவல் உதவி ஆய்வாளா் பாஸ்கரன் தலைமையிலான போலீஸாா், செஞ்சி பிரதான சாலையில் முட்டத்தூா் கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த டாரஸ் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் நிறுத்தினா். இதைத் தொடா்ந்து லாரியை சோதனையிட்ட போது, அதில் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட 30 டன் எடை கொண்ட கருங்கற்கள் இருந்தன.

இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த விக்கிரவாண்டி வட்டம், தும்பூா் தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஜெ. சின்னக்கவுண்டரிடம் விசாரித்தபோது, கருங்கற்களை அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

மேலும் லாரியின்உரிமையாளரான வானூா் வட்டம், எறையூரைச் சோ்ந்த நா. விசுவநாதன், விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மதன் ஆகியோா் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.