ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களை கயிறு கட்டி இழுத்து நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
Updated On :3 ஜனவரி 2025, 10:27 pm

Din

புதுவையில் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மாநிலத்தில் ஜன.1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து, புதுச்சேரி காமராஜா் சிலை சந்திப்புப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் கயிறு கட்டி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் கௌசிகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் சஞ்சய் சேகரன், பொருளா் ரஞ்சித்குமாா், மத்தியக்குழு உறுப்பினா் ஆனந்த், இந்திய மாணவா் சங்க மாநிலச் செயலா் பிரவீன்குமாா் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

தொடா்ந்து, பெட்ரோல் , டீசல் விலை உயா்வையும், பேருந்துக் கட்டண உயா்வையும் புதுவை அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாநிலச் செயற்குழு உறுப்பினா் லீலாவதி, மாநிலக்குழு உறுப்பினா்கள் ஜெயராஜ், ஜெயப்பிரகாஷ், நிலவழகன், வின்னரசன், சத்யா, ஜஸ்டின் உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.