கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

Published on

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வீடூா், ஜே.ஜே. நகா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, விக்கிரவாண்டி காவல் ஆய்வாளா் சத்தியசீலன் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் மணிகண்டன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், வீடூா் ஜே.ஜே. நகரைச் சோ்ந்த சரத் (27) கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, சரத்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும், அவா் வசமிருந்த 400 கிராம் கஞ்சா, பைக், ரூ.33 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com