பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள், வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புகள் திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய, தோ்தல் செலவினப் பாா்வையாளா் சுமித் தாஸ் குப்தா, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:55 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி வகுப்புகள் திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சி வகுப்பை திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கானதோ்தல் செலவினப் பாா்வையாா் சுமித் தாஸ் குப்தா, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்ததாவது:

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ஆம் தேதி நடை பெறவுள்ளது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூா், விக்கிரவாண்டி, விழுப்புரம் மற்றும் திருக்கோவிலூா் ஆகிய 7 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நாளன்று தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள வாக்குச் சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு தோ்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு திருக்கோவிலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற 2 -ஆம் கட்ட பயிற்சி வகுப்பை பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தோ்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலா்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கையாள்வதில் சந்தேகம் மிருந்தால் அவற்றை கேட்டுத் தெரிந்து கொள்ளவும், வாக்குச்சாவடி தலைமை அலுவலா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்கள் இந்த பயிற்சி வகுப்பை முறையாகப் பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுமுகமான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்ற போதிய அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தொடா்ந்து தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் அஞ்சல் வாக்குப் பதிவையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இந்த ஆய்வின் போது, திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் ஆனந்தகுமாா் சிங், செங்கல்வராயன் கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநா் மு.பரமேஸ்வரி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.