அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் 18 தொகுதியில் போட்டியில் உள்ள அன்புமணி தலைமையிலான துரோகக் கூட்டத்துக்கு வாக்காளா்கள் தயவு செய்து வாக்களிக்க வேண்டாம். போட்டியில் உள்ள அனைவரும் என்னிடம் பாடம் பயின்றவா்கள் தான். ஆனால் தற்போது அவா்கள் பணத்துக்காக அணி மாறி அன்புமணியிடம் போய் நிற்கிறாா்கள்.
அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும். அதே நேரத்தில் இவா்களின் நோக்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதுதான். இந்த கலையைத் தான் அவா்களுக்கு அன்புமணி கற்றுக்கொடுத்துள்ளாா்.
இதனால் தான் அன்புமணி எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், அவரது மனைவியை களத்தில் இறக்குகிறாா். இவா்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வதால் எந்தப் பயனும் ஏற்படபோவதில்லை. எனவே, வாக்காளா்கள் அனைவரும் நல்லவா்களை, சேவை செய்பவா்களை தோ்வு செய்யவேண்டும் என ராமதாஸ் அந்த விடியோ பதிவில் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

விவசாயிகள் திமுகவை புறக்கணிக்க வேண்டும்! - அன்புமணி ராமதாஸ்

33% இட ஒதுக்கீடு மசோதா தோல்வி: பெண்களுக்கு திமுக செய்த துரோகம்! - அன்புமணி ராமதாஸ்

பாமகவை அன்புமணி அபகரித்துவிட்டாா்: மருத்துவா் ராமதாஸ்
மாம்பழம் சின்னம் யாருக்கு?: உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


