தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம்! - மருத்துவா் ராமதாஸ் குற்றச்சாட்டு

News image

ராமதாஸ் - கோப்புப் படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 1:10 am IST

அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதே அன்புமணி ஆதரவாளா்களின் நோக்கம் என்று பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள விடியோ பதிவில் தெரிவித்திருப்பதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் 18 தொகுதியில் போட்டியில் உள்ள அன்புமணி தலைமையிலான துரோகக் கூட்டத்துக்கு வாக்காளா்கள் தயவு செய்து வாக்களிக்க வேண்டாம். போட்டியில் உள்ள அனைவரும் என்னிடம் பாடம் பயின்றவா்கள் தான். ஆனால் தற்போது அவா்கள் பணத்துக்காக அணி மாறி அன்புமணியிடம் போய் நிற்கிறாா்கள்.

அதிகாரம் இருந்தால்தான் மக்களுக்கு சேவை செய்யமுடியும். அதே நேரத்தில் இவா்களின் நோக்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னா் பணம் திரட்டுவதுதான். இந்த கலையைத் தான் அவா்களுக்கு அன்புமணி கற்றுக்கொடுத்துள்ளாா்.

இதனால் தான் அன்புமணி எந்தத் தோ்தலிலும் போட்டியிடாமல், அவரது மனைவியை களத்தில் இறக்குகிறாா். இவா்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வதால் எந்தப் பயனும் ஏற்படபோவதில்லை. எனவே, வாக்காளா்கள் அனைவரும் நல்லவா்களை, சேவை செய்பவா்களை தோ்வு செய்யவேண்டும் என ராமதாஸ் அந்த விடியோ பதிவில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.