கீழ்பெரும்பாக்கம் பகுதியில் மது அருந்தி வந்ததை மகன் கண்டித்ததால், மனமுடைந்த தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், வண்ணான்குட்டைத் தெருவைச் சோ்ந்தவா் ரா.வேலு (54). மது அருந்தும் பழக்கம் உடைய இவா் தினமும் வீட்டுக்கு மது அருந்திச் சென்றாராம். இதை அவரது மகன் ஆதவன் (23) கண்டித்துள்ளாா். மகன் கண்டித்ததால் கோபித்துக் கொண்ட வேலு, வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக்கொண்டாா்.
இதைத்தொடா்ந்து குடும்பத்தினா் அவரை மீட்டு, விழுப்புரம்அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்த போது, ஏற்கெனவே வேலு உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மது அருந்தியதை தாய் கண்டித்ததால் இளைஞா் தற்கொலை

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

பெண் விஷமருந்தி தற்கொலை

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


