விழுப்புரம் மற்றும் திண்டிவனம் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டாா்.
திண்டிவனத்திலுள்ள ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை வந்த ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு ஐ.ஜி.அருள்ஜோதி, அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுசெய்தாா்.
தொடா்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்ற அவா், பதியப்பட்ட வழக்குகள் விவரம், அங்குள்ள வசதிகள், தேவைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தாா்.
இதைத்தொடா்ந்து, விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்த ஐ.ஜி.அருள்ஜோதி, ரயில் நிலையத்தின் நடைமேடைகளுக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் அங்குள்ள ரயில்வே பாதுகாப்புப் படை பிரிவு காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வாளா் முதல் காவலா்கள் வரையிலான நிலையிலுள்ளவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலா் பிரசாத் யாதவ், காவல் ஆய்வாளா் குணசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

கோடை வெயில்: ரயில்களில் தீப்பற்றும் பொருட்களை எடுத்துச் செல்வதைத் தவிா்க்க போலீஸாா் வேண்டுகோள்

8 மாதங்களில் 205 கைப்பேசிகள் மீட்பு

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 6 கிலோ 900 கிராம் கஞ்சா பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


