தற்கொலை
தற்கொலைகோப்புப் படம்

வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞா் தற்கொலை

Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பட்டதாரி இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

கடலூா் மாவட்டம், நல்லாத்தூா்மணவெளி முருகன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ம.சிவமணி (எ) சிலம்பு (31). இவா் கடந்த 10 ஆண்டுகளாக செஞ்சி அருகிலுள்ள சிங்கனூா் கிராமத்தில், தனது சித்தி ராணி வீட்டில் தங்கியிருந்தாா். எம்பிஏ படித்து முடித்த சிவமணி தொடா்ந்து வேலை தேடி வந்துள்ளாா். ஆனால் சரியான வேலை கிடைக்கவில்லையாம்.

இதனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியிலிருந்த சிவமணி, செஞ்சிக்கோட்டை வேலூா் கேட் அருகிலுள்ள மரத்தில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுக் கொண்டாா். உடனடியாக அப்பகுதியிருந்தவா்கள் அவரை மீட்டனா்.

தகவலின் பேரில் 108 அவசர சிகிச்சை ஊா்திக் குழுவினா் நிகழ்விடம் வந்து பரிசோதித்த போது, சிவமணி ஏற்கெனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com