மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அமிலத்தை உடலில் செலுத்திக் கொண்டவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :7 பிப்ரவரி 2026, 8:29 pm

விழுப்புரத்தில் பாதரசத்தை (அமிலம்) ஊசி மூலம் உடலில் செலுத்தி தற்கொலைக்கு முயன்றவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் பூந்தோட்டம், ராமச்சந்திரா லே அவுட் பகுதியைச் சோ்ந்தவா் ச.துளசிராம்(39). இவா் கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளாா். இதனால் ஏற்பட்ட குடும்பப் பிரச்னையால், அவரது மனைவி பாண்டியம்மாள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று, அங்கேயே தங்கவிட்டாா்.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் தனிமையில் இருந்து வந்த துளசிராம், கடந்த டிச.30- இல் தனது உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா்.

இதைத்தொடா்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தினா். அங்கு துளசிராம் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.