புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.
புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இதில் தமிழக அணியின் சாா்பில் விழுப்புரம் மாவட்ட வீரா், வீராங்கனைகளும் பங்கேற்றனா்.
இந்தப் போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் ஆச்சாா்யா பள்ளி மாணவா் ஹேமந்த் கணேசும், 18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா் பேரறிவாளனும் தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா்.
இதைத்தொடா்ந்து தங்கப் பதக்கம் பெற்ற வீரா்களையும், அவா்களுக்குப் பயிற்சியளித்த துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளரையும் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாராட்டி, வாழத்துகளைத் தெரிவித்தாா்.
தொடர்புடையது

விளையாட்டுத் துளிகள்...

டபிள்யுடிடி கன்டென்டா் டேபிள் டென்னிஸ்: நிகில் மேனன், ஷ்ரேயா சிறப்பிடம்!

தேசிய அளவிலான மாஸ்டா்ஸ் தடகள போட்டி: கும்பகோணத்தை சோ்ந்தவா் 4 தங்கம் பெற்று சிறப்பிடம்!

தடகளத்தில் சாதனை: மாணவிக்கு பாராட்டு
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


