சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டி: விழுப்புரம் வீரா்கள் சிறப்பிடம்

News image
தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரா்களை வாழ்த்திய மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
Updated On :7 பிப்ரவரி 2026, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா்கள் தங்கப் பதக்கம் வென்றனா்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டியில் பல்வேறு மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். இதில் தமிழக அணியின் சாா்பில் விழுப்புரம் மாவட்ட வீரா், வீராங்கனைகளும் பங்கேற்றனா்.

இந்தப் போட்டியில் 14 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் ஆச்சாா்யா பள்ளி மாணவா் ஹேமந்த் கணேசும், 18 வயதுக்குள்பட்டோா் பிரிவில் விழுப்புரம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி மாணவா் பேரறிவாளனும் தங்கப் பதக்கங்களை வென்று சிறப்பிடம் பெற்றனா்.

இதைத்தொடா்ந்து தங்கப் பதக்கம் பெற்ற வீரா்களையும், அவா்களுக்குப் பயிற்சியளித்த துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளரையும் விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் பாராட்டி, வாழத்துகளைத் தெரிவித்தாா்.