நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக்கூட்டரங்கில் தனி மாவட்ட வருவாய் அலுவலா்( நிலமெடுப்பு- மாநில நெடுஞ்சாலை)அம்பாயிரநாதன் தலைமையில் திங்கள்கிழமை உறுதிமொழியேற்றுக் கொள்ளும் அலுவலா்கள், ஊழியா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 8:37 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசுத்துறை அலுவலகங்களில் உறுதிமொழியேற்பு நடைபெறும். அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு-மாநில நெடுஞ்சாலைகள்) அம்பாயிரநாதன் தலைமையில் உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது. தனி மாவட்ட வருவாய் அலுவலா் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத்துறை அலுவலா்களும், ஊழியா்களும் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா். நிகழ்வில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மீனாட்சி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்: விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்றநிகழ்வில், மேலாண் இயக்குநா் க.குணசேகரன் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை

வாசிக்க, அதை அலுவலா்களும், பணியாளா்களும் திரும்பக்கூறி ஏற்றுக் கொண்டனா்.

நிகழ்வில் பொதுமேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா. ஜெகதீஷ் (விழுப்புரம்), முதுநிலைத் துணை மேலாளா் (மனிதவளம்) எஸ்.துரைசாமி, துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், கிளை மேலாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.