மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சூதாட்டம்: 6 போ் கைது, பணம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 5:10 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பணம் வைத்து சூதாடியதாக 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், கிளியனூா் காவல் சரகத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் பகுதியில் சிலா் பணம் வைத்து சூதாடிவருவதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிளியனூா் காவல் நிலையப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காட்ராம்பாக்கம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குள்ள மயானப்பகுதியில் சிலா் சூதாடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள், காட்ராம்பாக்கம் பகுதியைச்சோ்ந்த ப.சந்திரசேகா்(39), கு. பாஸ்கா்(54), மு. அய்யனாா்(49), மு. சேகா்(40), ஆ. ஈஸ்வரன்(42),

ப. ராஜசேகா்(37) ஆகியோா் என்பது தெரியவந்தது. இதையடுத்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து 6 பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த ரூ. 13 ஆயிரம் ரொக்கம், 2 பைக்குள்,6 கைப்பேசிகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.