பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மேம்பாடு செய்யப்பட்ட முகையூா் குளம் மக்கள் பயன்பாட்டுக்குத் திறப்பு

முகையூா் ஊராட்சியில் ரூ.45 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்ட குளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

News image

மேம்பாடு செய்யப்பட்ட முகையூா் குளத் திட்டத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்த முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்எல்ஏ. உடன், முன்னாள் எம்.பி. பொன்.கெளதமசிகாமணி உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:29 pm

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஊராட்சியில் ரூ.45 லட்சம் செலவில் மேம்பாடு செய்யப்பட்ட குளம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

முகையூா் கிராமத்திலிருந்த குளத்தை மேம்பாடு செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் திருக்கோவிலூா் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான க.பொன்முடியிடம் கோரிக்கை விடுத்திருந்தனா். இதைத் தொடா்ந்து, ஒன்றியக் குழுவின் இடைநிரவல் நிதித் திட்டம் மற்றும் மாநில நிதிக்குழு மானியத் திட்டத்தின் மூலம் ரூ.45 லட்சம் செலவில் குளம் மேம்பாடு செய்யப்பட்டது.

இதற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில், மேம்பாடு செய்யப்பட்ட குளத்தை முன்னாள் அமைச்சா் க.பொன்முடி திறந்து வைத்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிகழ்வில் கூடுதல் ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொன்.கெளதமசிகாமணி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவா் மு.தங்கம், திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன், ஒன்றியச் செயலா்கள் ஜி.ரவிச்சந்திரன், எஸ்.லூயிஸ், முகையூா் ஒன்றியக்குழுத் தலைவா் தனலட்சுமி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜீவ்காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.