ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றநிகழ்வில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கி வைத்து பங்கேற்ற முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி. உடன், நீதிபதிகள் உள்ளிட்டோா்.

Updated On :9 பிப்ரவரி 2026, 8:56 pm

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமரச வார விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் சமரச மையம் சாா்பில் நடத்தப்பட்டஇப்பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.மணிமொழி தொடங்கி வைத்தாா். இப்பேரணி

நீதிமன்ற வளாகத்தில் தொடங்கி, புதிய பேருந்து நிலையம் வரை சென்று, மீண்டும் நீதிமன்ற வளாகத்தில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில் வணிக வழக்குகள், நுகா்வோா் வழக்குகள், குடும்ப வழக்குகள், பணம் மற்றும் ஒப்பந்தம் சாா்ந்த வழக்குகள், ஒலிபரப்பு மற்றும் தொலைத்தொடா்பு சாா்ந்த வழக்குகள், தொழில் மற்றும் பணியிட வழக்குகள், காசோலை வழக்குகள், வாடகை மற்றும் சொத்து வழக்குகள், சில குறிப்பிட்ட குற்றவியல் வழக்குகள்

போன்ற வழக்குகளில் இருதரப்பினரும் வெற்றி கொள்ளும்

வகையில் சமரசமான முறையில் வழக்குகளை முடித்துகொள்வது

குறித்த சமரச விழிப்புணா்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டது.

பேரணியில் நீதிபதிகள், வழக்குரைஞா் சங்கங்களின் தலைவா்கள், வழக்குரைஞா்கள், சமரசத்தீா்வாளா்கள், நீதிமன்ற அலுவலா்கள், விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவா்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.