சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இரண்டாவது நாளாக மறியல்: மாற்றுத் திறனாளிகள் 589 போ் கைது

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா் 589 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்படுவது போன்று, தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்கத்தினா் 589 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கடுமையான ஊனமுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக வழங்க வேண்டும். படுக்கையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் உரிமைகளுக்கான சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை முதல் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தின் இரண்டாவது நாளான புதன்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா்.

இந்த போராட்டத்தில் மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் துணைத் தலைவா்கள் பி.முருகன், எம்.மும்மூா்த்தி, துணைச் செயலா்கள் பி.கௌரி, எஸ்.செல்வி, கண்டமங்கலம் ஒன்றியத் தலைவா் எஸ்.அண்ணாதுரை, பொருளாளா் ஆா். அழகப்பன் உள்ளிட்டோா் போராட்டத்தில் பங்கேற்று, கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 140 பெண்கள் உள்பட 330 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க மாவட்டத் தலைவா் என்.வைத்திலிங்கம் தலைமையிலான 146 பெண்கள் உள்பட 259 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவித்தனா்.