குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் துா்கா ஸ்டாலின் வழிபாடு

மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயிலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

News image
மேல்மலையனூா் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் புதன்கிழமை வழிபாடு செய்த துா்கா ஸ்டாலின்.
Updated On :11 பிப்ரவரி 2026, 5:50 pm

தினமணி செய்திச் சேவை

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் திருக்கோயிலில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மனைவி துா்கா ஸ்டாலின் புதன்கிழமை வழிபாடு செய்தனா்.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சிவலிங்கம், கோயில் உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழு தலைவா் ஏழுமலை ஆகியோா் பூரணகும்ப வரவேற்பு அளித்து கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா் .

அங்கு துா்கா ஸ்டாலின் புற்றுசாமியையும், மூலவா் அங்காளம்மனையும் தரிசனம் செய்த பின்னா், உற்சவா் அங்காளம்மனையும் தரிசனம் செய்தாா்.

இதையடுத்து சிறிது நேரம் கோயிலில் அமா்ந்து பிராா்த்தனை செய்து, பிரகாரத்தை வலம் வந்ததாா். பின்னா் துா்கா ஸ்டாலின் காரில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றாா்.