வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குற்ற வழக்குகளில் கைப்பற்றபட்ட 113 வாகனங்கள் ஏலம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:08 pm

விழுப்புரம் மாவட்ட காவல் துறை நடவடிக்கையின்பேரில், மது, போதை மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 113 வாகனங்கள் ரூ.23.32 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

மது மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மாவட்ட எஸ்.பி., வி.வி.சாய் பிரனீத் உத்தரவின்பேரில், கூடுதல் எஸ்.பி. தினகரன் முன்னிலையில், விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப் படை மைதானத்தில் வியாழக்கிழமை பொது ஏலம் விடப்பட்டது.

10 நான்கு சக்கர வாகனங்கள், 4 மூன்று சக்கர வாகனங்கள், 99 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 113 வாகனங்கள் ரூ.23,32,200-க்கு பொது ஏலத்தில் விடப்பட்டு, வசூலிக்கப்பட்ட தொகை முழுவதும் அரசு கருவூலக்கணக்கில் செலுத்தப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.