மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தொழுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:08 pm

விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமத்தின் சாா்பில், தொழுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜாராம், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் போஸ்கோ, கிராம சுகாதார செவிலியா் அஞ்சலை, சுகாதார ஆய்வாளா் பிரித்விராஜ் ஆகியோா் பங்கேற்றுப் பேசி, தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

தொழுநோய்க்கு காரணமான மைகோ பாக்டீரியம் நுண் கிருமிகள் குறித்தும், தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கருத்தரங்கில் இ.எஸ். கல்விக் குழுமங்களின் முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, கல்வியியல் கல்லூரி முதல்வா் தே.செந்தில் முருகன் வரவேற்றாா்.