ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தொழுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:08 pm

Syndication

விழுப்புரம் இ.எஸ். கல்விக் குழுமத்தின் சாா்பில், தொழுநோய் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது.

கல்விக் குழுமங்களின் தலைவா் எஸ்.செல்வமணி தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராஜாராம், மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் போஸ்கோ, கிராம சுகாதார செவிலியா் அஞ்சலை, சுகாதார ஆய்வாளா் பிரித்விராஜ் ஆகியோா் பங்கேற்றுப் பேசி, தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.

தொழுநோய்க்கு காரணமான மைகோ பாக்டீரியம் நுண் கிருமிகள் குறித்தும், தேசிய குடற்புழு நீக்க நாள் குறித்தும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கருத்தரங்கில் இ.எஸ். கல்விக் குழுமங்களின் முதல்வா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா். முன்னதாக, கல்வியியல் கல்லூரி முதல்வா் தே.செந்தில் முருகன் வரவேற்றாா்.